Published : 03 Sep 2014 11:30 AM
Last Updated : 03 Sep 2014 11:30 AM
முதல்வர் ஜெயலலிதா வீட்டருகே சுற்றித்திரிந்த கேரள இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டருகே செவ்வாய் கிழமை காலையில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றிக் கொண்டிருந்தார். போலீஸார் விசாரித்தபோது, “எனது பெயர் ரஞ்சித், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து வருகிறேன். எனது அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி முதல்வர் ஜெயலலிதாவிடம் விளக்க வந்துள்ளேன்” என்றார்.
அந்த இளைஞரிடம் மேலும் விசாரித்தபோது அவரது சகோதரி ஒருவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த இளைஞரை எச்சரித்து அவரது சகோதரியிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT