Published : 09 Sep 2014 09:34 AM
Last Updated : 09 Sep 2014 09:34 AM

சுடுகாட்டில் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்

கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் உள்ளது ஜெகதேவி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் நேற்று காலை பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியே சென்ற சமூக நுகர்வோர் நலப் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த முரளி, சத்தியராஜ் உள்ளிட்டோர் பார்த்தபோது, ஒரு சாக்குப் பையில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்த சமூக நுகர் வோர் நலப் பாதுகாப்புச் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்து வர் அசோக்குமார் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, குழந்தையை சுடுகாட்டில் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிகிச்சைக்கு பின் இந்தக் குழந்தை மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என கண் காணிப்பாளர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x