Published : 04 Dec 2018 12:57 PM
Last Updated : 04 Dec 2018 12:57 PM

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழை: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை தமிழக கடற்கரை பகுதிகளையொட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. 

இதனால், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 13 செ.மீ. மழையும், சோழவரத்தில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் இடைவெளிவிட்டு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்" என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x