Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM
நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களையும், புரவலர்களையும் சேர்க்கும் நூலகர்களுக்கு விருது வழங்கப்படும் என்று பொது நூலகத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
பொதுநூலகத்துறை இயக்கு நரும் (கூடுதல் பொறுப்பு), பள்ளிக் கல்வி இயக்குநருமான வி.சி.ராமேஸ்வரமுருகன், மாவட்ட நூலகர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி (இன்று) நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது. நூலகர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நூலக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.
நூலகங்களுக்கு அதிகப்படி யான உறுப்பினர்களையும், புரவ லர்களையும் சேர்க்கும் முதல் 3 மாவட்டங்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதும், கேடயமும் வழங்கப்படும். மாநில அளவில்,நூலகத்தை தூய்மை யாகப் பராமரிக்கும் 3 நூலகர்கள் கவுரவிக்கப்படுவர்.
குழந்தைகளுக்கு நல்ல பழக் கத்தை உருவாக்கும் வகையில் ‘கதை சொல்லி’ நிகழ்ச்சி, சதுரங்கப்போட்டி, ‘சிந்தனை முற்றம்’ நிகழ்ச்சி நடத்தப்படும். ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை நூலகங்க ளில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள், புரவலர்களின் விவரங்களைச் சமர்ப் பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT