Published : 07 Aug 2018 07:07 PM
Last Updated : 07 Aug 2018 07:07 PM

மிகப்பெரிய தலைவரை தமிழகம் இழந்து தவிக்கிறது: கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘திமுக தலைவர் கருணாநிதியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய தலைவரை, இந்தியாவில் குறிப்பாக தமிழகம் இழந்து தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x