Published : 07 Aug 2018 08:54 PM
Last Updated : 07 Aug 2018 08:54 PM

புதன் அதிகாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கலைஞர் உடல் ராஜாஜி ஹால் வருகை

 

திமுக தலைவர் மு.கருணாநிதி செவ்வாய் மாலை 6.10 மணிக்குக் காலமானார். இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கருணாநிதியின் உடல் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக கோபாலபுரம் இல்லத்தில் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அதிகாலை 3 மணி வரை சிஐடி காலனி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பிறகு காலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பிற தலைவர்களின் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் வைக்கப்படும்.''

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x