Last Updated : 06 Apr, 2025 07:42 PM

15  

Published : 06 Apr 2025 07:42 PM
Last Updated : 06 Apr 2025 07:42 PM

‘எப்படியிருந்த அதிமுக இப்படி ஆகிவிட்டதே’ - கார்த்தி சிதம்பரம் எம்.பி வருத்தம்

கார்த்தி சிதம்பரம்

மதுரை: “அதிமுக பல ஆளுமைகள் தலைமை தாங்கிய கட்சி. எப்படியிருந்த கட்சி தற்போது டெல்லிக்கு சென்று கூட்டணி அமைக்கும் பரிதாப நிலைக்கு வந்துள்ளது வேதனையானது.” என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் பாம்பன் பாலம் திறப்பதை வரவேற்கிறேன். வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். பெரும்பான்மை மூலமாக வக்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் எதிர்ப்பை ஆழமாக பதிவு செய்துள்ளது. இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் சட்டமாகவே பார்கிறோம்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தீர்வு ஏற்பட தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களுடன் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இலங்கை பயனத்தின் போது பிரதமர் வலியுறுத்தினாரா? என்பது தெரியவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி வேதனை அளிக்கிறது. அதிமுக எப்படி இருந்த கட்சி. அது சாதாரணமான கட்சியில்லை. தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆண்ட கட்சி. அதிமுகவுக்கு பல ஆளுமைகள் தலைமை தாங்கினார்கள். யாராவது கூட்டணி வைக்க வேண்டுமென்றால் அந்த கூட்டணிக்கு தான் வருவார்கள்.

ஆனால் தற்போது அதிமுகவினர் டெல்லிக்கு சென்று கூட்டணி வைக்கிறார்கள். திமுக கூட்டணியில் தான் 2026 தேர்தலிலும் காங்கிரஸ் தொடரும். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 15 Comments )
  • R
    Raja

    நீங்கள் முதலில் உங்களை நினைத்து கவலை படுங்கள் 400சீட் ஏன் இன்று 100 தாண்டவில்லை என்று கவலை படுங்கள் தமிழகத்தில் தனித்து நின்றால் 0என்பதை குறித்து கவலை படுங்கள்

      R
      Raja

      2014 தேர்தல் நினைவு இல்லையா தனித்து நின்றால் கண்டிப்பாக குமரி பாரளுமன்றம் பிஜேபி தான் இன்றைய சூழலில் கண்டிப்பாக காங்கிரஸ் விட அதிக வாக்குகள் பெறும் தமிழகத்தில் பிஜேபி அதற்கு சான்று 2024 தேர்தல்

      0

      0

      பிரபாகர்

      தமிழகத்தில் தனித்து நின்றாள்... காங்கிரெஸ்ம் முட்டை தான்... பாஜகவும் முட்டைதான். அதாவது இரண்டு தேசிய கட்சிகளும் முட்டை தான். என்னவொன்று... காங்கிரஸ் சில இடங்களில் டெபாசிட் வாங்கும். பாஜக... நோட்டாதான்.

      8

      3

  • K
    Ks Iyer

    காங்கிரஸ் இப்படிச் சொல்லக் கூடாது. காங்கிரசுக்கு தனித்துவமான கொள்கை இல்லை. காங்கிரசின் கொள்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஒரு மாநிலத்தில் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவர்கள், ஒரு மாநிலத்தில் அவர்கள் கம்யூனிச கூட்டணியில் உள்ளனர். காங்கிரசில் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும்.

      C
      Chandran Wilson

      பிஜெபி எப்படிங்க ? ஒரே ஒரு கொள்கை தானே - ஆட்சியில் அமர யார் கூட வேண்டுமானாலும் நேரத்துக்கு ஏற்ப இணைந்து கொள்வதுதானே - அரசு ஊழியர்களை வைத்து ஊழல்வாதி என முத்திரையை குத்திவிட்டு பிறகு அவர்களை மிரட்டி அல்லது பதவி ஆசையை தூண்டி தங்களோடு இணைத்துக்கொள்வது -அப்படியான நபர்களின் பெயர் வேண்டுமா .

      7

      3

      I
      Ilango

      பாஜகவைப்போலவே,அதன் ஆதரவாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.1989 ஆம் ஆண்டுக்கு பிறகு ,கடந்த 36 ஆண்டுகளாக நேரு குடும்பத்தினர் யாரும் ஆட்சிக்கு வரவில்லை என்பதே தெரியாமல் இங்கு வந்து பதிவிட்டு தங்கள் அறியாமையையும்,காங்கிரஸ் மீதுள்ள தீராத வெறுப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

      9

      5

      பிரபாகர்

      பாஜகவின் கொள்ளை என்ன? காங்கிரஸ் கொண்டு வந்த சட்டங்களை கடுமையாக கடைபிடிப்பது தான். அப்புறம் காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜகவின் நிலை என்ன? தமிழக பாஜகவின் நிலை என்ன?

      12

      5

 
x
News Hub
Icon