Published : 31 Mar 2025 09:39 AM
Last Updated : 31 Mar 2025 09:39 AM

‘அன்பு, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வளரட்டும்’ - விஜய் ரமலான் வாழ்த்து

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மார்ச் 7 நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய்.

சென்னை: தமிழகத்​தில் இன்று (மார்ச் 31) ரம்​ஜான் பண்​டிகை கொண்​டாடப்​படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களிடன் அன்பைப் பரிமாறி ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்த்து அட்டையாக இதனை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வாழ்த்து அட்டையில் வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் படங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக அரசு தலைமை காஜி வெளி​யிட்​ட அறி​விப்​பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்​வால் மாத பிறை சென்​னை​யிலும் இதர மாவட்​டங்​களி​லும் காணப்​பட்​டது. எனவே, திங்​கட்​கிழமை (இன்​று) ஷவ்​வால் மாத முதல் பிறை என்று ஷரி​யத் முறைப்​படி நிச்​ச​யிக்​கப்​பட்​டிருக்கிறது. அந்​தவகை​யில், திங்​கட்​கிழமை ரம்​ஜான் பண்​டிகை கொண்​டாடப்​படும்’ என தெரி​வித்​திருந்தார். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் பரவலாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x