Published : 28 Mar 2025 06:19 AM
Last Updated : 28 Mar 2025 06:19 AM
திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ‘அந்த தியாகி யார்?’ என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், ‘டாஸ்மாக் ஊழல்- பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ.1,000 கோடி, உரிமம் வராத பார்கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்கள் கேள்வி என்றும், 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து ரூ.1,000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...