Published : 28 Mar 2025 06:10 AM
Last Updated : 28 Mar 2025 06:10 AM
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் (பெருந்துறை) பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் அதிகமாகவும், விதிகள் கடுமையாகவும் உள்ளன.
இதனால் ஏராளமான பெண்கள் உரிமைத் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உரிமைத் தொகை பெறுவதற்கான கெடுபிடிகளை தளர்த்த வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...