Published : 28 Mar 2025 12:07 AM
Last Updated : 28 Mar 2025 12:07 AM
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் இன்று (மார்ச் 28) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 29 முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப். 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும், வரும் 29 முதல் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கும் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment