Published : 27 Mar 2025 05:43 AM
Last Updated : 27 Mar 2025 05:43 AM

அரசு ஊழியர்களுக்கு ஏப்.2-ல் சம்பளம்: தமிழக அரசு அறிவிப்பு

ஏப் 1-ம் தேதிக்கு பதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஏப்.2-ம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கருவூலம் மற்றும் கணக்குத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் , குடும்ப ஓய்வூதியம் வழக்கமாக வரும் ஏப்.1ம் தேதி வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படும். ஆனால், இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் ஏப்.2ம் தேதி சம்பளம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x