Published : 26 Mar 2025 06:37 AM
Last Updated : 26 Mar 2025 06:37 AM

ரமலான் விடுமுறைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சென்னை: காரண​மாக, அரசு போக்​குவரத்து கழகங்​கள் சார்​பில், சென்னை உட்பட பல்​வேறு இடங்​களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, துாத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு பேருந்​துகளும் என மொத்​தம் 990 பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. இதே​போல, வரும் 31-ம் தேதி சென்​னைக்​கும் இதர ஊர்​களுக்கு 890 சிறப்பு பேருந்​துகள்இயக்க திட்​ட​மிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர். பெங்​களூருக்கு வரும் 28-ல் 100 சிறப்பு பேருந்​துகளும், வரும் 29-ல் 95 சிறப்பு பேருந்​துகளும் இயக்​கப்பட உள்​ளன. மாதவரத்​தில் இருந்து வரும் 28 மற்​றும் 29-ம் தேதி​களில் தலா 20 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். 31-ம் தேதி சொந்த ஊர்​களில் இருந்து திரும்ப வசதி​யாக அனைத்து இடங்​களில் இருந்​தும் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x