Published : 25 Mar 2025 06:09 AM
Last Updated : 25 Mar 2025 06:09 AM

சென்னை | கிரிக்கெட் பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிய 2 பேர் தூணில் மோதி உயிரிழப்பு

சென்னை: மெட்ரோ ரயில் தூணில் இருசக்கர வாக​னம் மோதிய விபத்​தில் மாணவர்​கள் இரு​வர் உயி​ரிழந்​தனர். சென்னை ராமாபுரத்​தைச் சேர்ந்​தவர் கெல்​வின் கென்னி ஜெயன் (21). இவர் சென்​னை​யில் உள்ள கல்​லூரி ஒன்​றில் 2-ம் ஆண்டு பட்​டப்​படிப்பு படித்து வந்​தார். இவரது நண்​பர் சித்​தார்த் (20). சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் முதலா​மாண்டு படித்து வந்​தார். இரு​வரும், சென்னை சேப்​பாக்​கத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற கிரிக்​கெட் போட்​டியை காணச் சென்​றனர்.

இதற்​காக தங்​களது இருசக்கர வாக​னத்தை ஆலந்​தூர் மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தி​விட்டு ரயில் மூலம் சென்​றனர். பின்​னர் போட்டி முடிந்து மீண்​டும் ரயில் நிலை​யம் வந்த அவர்​கள், தங்​களது இருசக்கர வாக​னத்தை எடுத்​துக் கொண்டு மீனம்​பாக்​கம் சென்​றனர். அங்கு ஹோட்​டலில் சாப்​பிட்​டு​விட்டு ராமாபுரம் நோக்கி புறப்​பட்​டனர்.

அப்​போது ஆலந்​தூர் ஜிஎஸ்டி சாலை ஆசர்​கானா வளைவில் வந்​த​போது இருசக்கர வாக​னம் வேக​மாக சென்​ற​தாக கூறப்​படு​கிறது. இதனால் திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த வாக​னம் தாறு​மாறாக ஓடி மெட்ரோ ரயில் தூண் மீது மோதி​யுள்​ளது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே இறந்​தனர். தகவல் அறிந்து பரங்​கிமலை போக்​கு​வரத்து புல​னாய்வு பிரிவு போலீ​ஸார் வந்து உடல்​களை மீட்​டு, குரோம்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x