Published : 22 Mar 2025 06:15 AM
Last Updated : 22 Mar 2025 06:15 AM

​மார்ச் 25-ல் இஃப்​தார்: கூட்​டணி கட்​சிகளுக்கு பாஜக அழைப்பு

சென்னை: தமிழக பாஜக சிறு​பான்​மை​யினர் அணி சார்​பில் ரமலான் இஃப்​தார் நோன்பு திறக்​கும் நிகழ்ச்சி எழும்​பூரில் உள்ள பைசல் மஹாலில் மார்ச் 24-ம் தேதி நடக்​கிறது. இதற்​காக, கூட்​டணி கட்​சித் தலை​வர்​களுக்கு பாஜக அழைப்பு விடுத்து வரு​கிறது.

அந்த வகை​யில், பாஜக மாநில விளை​யாட்டு மேம்​பாட்டு பிரிவு தலை​வர் அமர்பிர​சாத் ரெட்டி தலை​மை​யில், பாஜக சிறு​பான்​மைப் பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிம், சிறு​பான்மை அணி மாநிலத் தலை​வர் டெய்சி தங்​கை​யா, மாநில செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்​ளிட்ட பாஜக நிர்​வாகி​கள் அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரனுக்கு நேரில் அழைப்பு விடுத்​தனர்.

தொடர்ந்​து, புதிய நீதிக் கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், தமிழக மக்​கள் முன்​னேற்​றக் கழக நிறுவன தலை​வர் ஜான் பாண்​டியன், முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் செல்​வம் உள்​ளிட்டோர் அழைக்​கப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x