Published : 22 Mar 2025 12:07 AM
Last Updated : 22 Mar 2025 12:07 AM

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 18-ம் தேதி காலை விநாடிக்கு 500 கனஅடியாக பதிவான நீர்வரத்து, 19-ம் தேதி காலை 1,500 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினமும் விநாடிக்கு 1,500 கனஅடியாகவே நீடித்த நீர்வரத்து, நேற்று காலை 2,000 கனஅடியாக அதிகரித்தது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 425 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 586 கனஅடியாக

அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 108.39 அடியாகவும், நீர் இருப்பு 76.14 டிஎம்சியாகவும் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon