Published : 20 Mar 2025 06:17 AM
Last Updated : 20 Mar 2025 06:17 AM

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (மார்ச் 21) முதல் 26-ம் தேதி வரை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

21, 23, 25-ம் தேதிகளில் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவான்கேணி, உத்தண்டி ஆகிய பகுதிகளிலும், 22, 24, 26-ம் தேதிகளில் பெருங்குடி, பாலவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஒக்கியம்-துரைபாக்கம் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற, வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். குடிநீர் தொட்டிகள், லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடையின்றி சீராக நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வரி செலுத்த கடைசி நாள்: சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய குடிநீர், கழிவுநீர் அகற்று வரி, கட்டணங்கள் உள்ளி்ட்டவற்றை இம்மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

குடிநீர் வாரியத்தின் பகுதி அலுவலகங்கள், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை, வரைவோலை மூலமாக செலுத்தலாம். https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலைதளம் மற்றும் இ-சேவை மையங்கள், வசூல் மையங்களில் உள்ள க்யூஆர் குறியீடு மற்றும் பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தியும் செலுத்தலாம் என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x