Published : 04 Aug 2014 09:05 AM
Last Updated : 04 Aug 2014 09:05 AM
வேலூர் தாலுகா துத்திக்காடு கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகளுக்கு 4 வயது ஆகிறது. சனிக்கிழமை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அந்த 4 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (28) என்பவர், கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி வரலாம் எனக்கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
2 மணி நேரம் கழித்து திரும்பி வந்த ஏழுமலை, சிறுமியை கீழே இறக்கி விட்டுவிட்டு தப்பியோடினார். அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த சிறுமியை, அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்தவர்கள், அவர் பாலியல் பலாத் காரத்துக்கு உள்ளாகிய விவரத்தை கூறினர். இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT