Last Updated : 17 Feb, 2025 06:48 AM

2  

Published : 17 Feb 2025 06:48 AM
Last Updated : 17 Feb 2025 06:48 AM

காசி தமிழ் சங்கமங்களால் உயர்ந்த தமிழர் பெருமை: வாராணசி ஆட்சியர் தமிழர் ராஜலிங்கம் சிறப்பு நேர்காணல்

ராஜலிங்கம் ஐஏஎஸ் | கோப்புப் படம்

புதுடெல்லி: காசி தமிழ் சங்கமங்​களால் இந்தி மொழி பேசுபவர்​களிடம் தமிழர் பெருமை பல மடங்கு உயர்ந்​திருப்​பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் தெரி​வித்​துள்ளார். பிரதமர் மோடி​யின் மக்களவை தொகு​தி​யில் முக்கிய நிர்​வாகப் பணியாற்றும் தென்​காசி மாவட்டத் தமிழரான அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

மகா கும்​பமேளாவால் வாராணசி​யிலும் குவி​யும் கூட்​டத்தை எப்படி சமாளிக்​கிறீர்​கள்?

மகா கும்​பமேளா​வில் வசந்த பஞ்சமிக்கு பிறகு பெரும்​பாலான அகாடா துறவிகள் வாராணசிக்கு இடம்​பெயர்​வார்​கள். இதனால், முன்​கூட்​டியே போக்கு​வரத்து பாது​காப்பு ஏற்பாடுகள் செய்​துள்ளோம். அன்றாடம் காலை, மாலை நடைபெறும் கங்கை ஆரத்தி நிகழ்ச்​சியை அனைத்து கரைகளி​லும் தற்காலிகமாக நிறுத்தி வைத்​துள்ளோம். பள்ளி​களுக்கு விடு​முறை அளித்து, வகுப்புகளை இணைய வழிமூலம் நடைபெற செய்​துள்ளோம். உள்ளூர் போக்கு​வரத்​துகளை அதிகப்​படுத்தி உள்ளோம். காசி விஸ்​வநாதர் கோயி​லிலும் பூஜை காலத்​தில் சிறு மாற்றம் செய்து, பொது​மக்கள் தரிசன நேரம் அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. இதுபோன்ற மாற்​றங்​களால்கூட்​டத்தை இன்று வரை சமாளித்து வருகிறோம்.

கடந்த ஜனவரி 1 முதல் செயலாளர் பணிக்கு பதவி உயர்வு கிடைத்​தும், மகா கும்​பமேளா மற்றும் கேடிஎஸ் 3.0 நிகழ்ச்​சிகளால் இன்னும் ஆட்சி​யராகவே தொடர்வதை எப்படி உணர்​கிறீர்​கள்?

அரசு அதிகாரியான பிறகு பொது​மக்​களுக்கான பணிதான் முதலில் முக்​கி​யம். எனவே, என்ன பதவி​யில் இருக்​கிறோம் என்பதை விட மக்களுக்காக எந்த அளவுக்கு பயனாக உள்ளோம் என்பது​தான் முக்​கி​யம். ஒரு தமிழனாக என்னை பொறுத்த வரை இந்த 2 நிகழ்ச்​சிகளி​லும் பணி செய்​யும் வாய்ப்பு கிடைத்ததை பாக்​கியமாக கருதுகிறேன்.

காசி தமிழ் சங்கமங்​களால் வாராணசிக்​கும் தமிழகத்​துக்​கும் என்ன பலன்?

தமிழகத்​துக்​கும் இதர வெளி​நாடு, உள்நாடு போன்ற பல பகுதி​களுக்​கும் பண்டைய காலம் முதல்பல்வேறு விதமான தொடர்​புகள் உள்ளன. இதில், வாராணசி​யுடனான தொடர்பு இந்த சங்கமங்​க ளின் மூலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்விரு பகுதி​களுக்கான கலாச்​சா​ரம், இலக்​கி​யம், மொழி, பண்பாடு உள்ளிட்ட தொடர்​புகள் குறித்த ஆய்வுகள் அதிகரித்​துள்ளன. இதன்​மூலம், தமிழகத்​தின் தமிழர்கள் பெரு​மையை வட இந்தி​யர்கள் உணர்ந்து வருகின்​றனர். செம்​மொழி தமிழாய்வு மத்திய நிறு​வனம் சார்​பில் ஒவ்வொரு சங்கமத்​தி​லும் பல எண்ணிக்கை​யில் இந்தி உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளி​யிடப்​படு​கின்றன. இதன்​மூலம், தமிழர்​களின் பெருமை இந்தி உள்ளிட்ட இதர மொழி பேசுபவர்கள் இடையே பல மடங்கு உயர்ந்​துள்ளது. சங்கமங்​களால் வாராணசிக்கு தமிழர்கள் வருகை பல லட்சங்​களில் அதிகரித்​துள்ளது.

பிரதமரின் வாராணசி மக்களவை தொகுதி வளர்ச்சி எப்படி உள்ளது?

எந்த மாநிலத்​தி​லும் காண முடியாத அதிகவேக வளர்ச்சி வாராணசி​யில் உள்ளது. இங்கு 2023-ம் ஆண்டு 70 நாடு​களின் தூதர்கள் வந்தனர். சர்வதேச அளவிலான ஜி20 மாநாடு​களில், இந்தியா​விலே மிக அதிகமாக இங்கு 7 மாநாடுகள் நடைபெற்றன. இவைவாராணசிக்கு சர்வதேச அளவில் புகழை ஈட்டி தந்துள்ளது. வாராணசி நெரிசலான புனித நகரம் என்ப​தால் மெட்ரோ ரயில் அமைக்​கும் சாத்​தி​யங்கள் குறைவு. இதனால், இந்தியா​விலேயே முதல் நகரமாக ‘ரோப் வே கார்’ எனும் வான்​வழியே செல்​லும் மின்சார வாகனம் இங்கு விரை​வில் ரூ.645 கோடியில் அமைகிறது. ரயில் நிலை​யங்​களில் இறங்​குபவர்கள் நேராக காசி விஸ்​வநாதர் கோயிலுக்கு சென்று தரிசிக்​கலாம். இதுவரை ரூ.50,000 கோடி வரையிலான திட்​டங்கள் பிரதம​ரால் அவரது தொகு​தி​யில் அமலாகி உள்ளது. இன்னும் பல ஆயிரம் கோடிகளில் பல திட்​டங்கள் எந்நேர​மும் அறிவிக்​கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆன்மிகம், ஐதீகம் எனும் பெயரில் அசுத்​த​மாக்​கப்​பட்டு வந்த கங்கையை தூய்​மைப்​படுத்த எம்.பி.யான பின்னர் பிரதமர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

பிரதமர் இங்கு எம்.பி.​யானது முதல் பொது​மக்​களுக்கு விழிப்பு​ணர்வு ஏற்படுத்​தப்​பட்டு அசுத்​த​மாக்​கும் செயல்கள் நின்​றுள்ளன. நவராத்​திரி விழாக்​களின் போது கங்கை​யில் சிலைகளை கரைக்க தடை உள்ளது. தற்காலிக குளங்களை உருவாக்கி அதில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்​துள்ளோம். இதற்கு பொது​மக்கள் ஒத்துழைக்​கின்​றனர். கங்கை​யின் 84 படித்​துறை​களை​யும் தாண்டி தொடரும் கரைகளை அங்கு வசிக்​கும் கிராமவாசிகளை வைத்து சுத்​தமாக பாது​காக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதன் பலனாக பல ஆண்டு​களுக்கு முன்பு இருந்ததை போல் சமீப ஆண்டு​களாக ‘கங்கா டால்​பின்’ எனும் நீர் உயிரினம் மீண்​டும் அதிக எண்ணிக்கை​யில் வரத் தொடங்கி விட்டன. பார்​வையற்ற இந்த டால்​பின் சுத்​தமான நீரில் அதிகமாக வாழும் எனக் கருதப்​படு​கிறது. உ.பி. அரசின் நமாமி கங்கை எனும் நதிநீர் சுத்​தி​கரிப்பு திட்டம் முழு​வீச்​சில் நடைபெறுகிறது. இங்குள்ள ராம்​நகரில் கொல்​கத்தா வழியாக கங்கை​யில் சரக்​குகள் அனுப்ப கங்கை கரையில் ஒரு மினி துறை​முக​மும் செயல்​படு​கிறது.

முதல் சங்கமம் 2002-ம் ஆண்டு நடந்த போது காசி விஸ்​வநாதர் கோயி​லில் தேவாரம் ஓதும் முயற்சி எந்த நிலை​யில் உள்ளது?

காசி விஸ்​வநாதர் கோயில் அறக்​கட்டளை நிர்​வாகக் குழு​வில் நானும் இடம்​பெற்றிருப்​ப​தால், தேவாரம் ஓத அனு​மதி அளித்​தாகி ​விட்​டது. இதை கோயி​லில் ஓது​வாரை நியமித்து பாட வைக்க தமிழகத்​தில் இருந்து ​யாரும் ​முன்​வர​வில்லை. இதற்கு வேறு அமைப்பு​கள் ஏற்​பாடு செய்ய ​முன்வந்​தால் உடனடியாக தேவாரம் ஓதுவது தொடங்​கப்​படும்.இவ்​வாறு ​மாவட்​ட ஆட்​சியர்​ ராஜலிங்​கம்​ கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x