Last Updated : 15 Feb, 2025 08:13 AM

1  

Published : 15 Feb 2025 08:13 AM
Last Updated : 15 Feb 2025 08:13 AM

விழுப்புரம் மாவட்டத்தை மீண்டும் கலைத்துப் போட்ட திமுக! - அதிமுக வரவான லட்சுமணனுக்கு அடித்தது யோகம்

இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.

ஒரு காலத்​தில் பாமக இதேபோல் மாவட்​டங்​களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்​த​போது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்​குப் போயிருக்​கிறார்​கள். கள்ளகுறிச்​சியை உள்ளடக்கிய ஒன்று​பட்ட விழுப்புரம் மாவட்​டத்​துக்​கும் அமைச்சர் பொன்​முடி தான் செயலா​ளராக இருந்​தார்.

சுமார் 12 ஆண்டு​களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்​டத்தை வடக்கு, தெற்கு என இரண்​டாகப் பிரித்தது திமுக. அப்போது வடக்கு மாவட்டச் செயலா​ளராக பொன்​முடி​யும் தெற்கு மாவட்டச் செயலா​ளராக அங்கயற்​கன்னி​யும் நியமிக்​கபட்​டனர். பொன்​முடி துணைப் பொதுச்​செய​லாளர் ஆனதும் வடக்கு மாவட்​டத்​துக்கு மஸ்தானும், தெற்கு மாவட்​டத்​துக்கு புகழேந்​தி​யும் செயலாளர்களாக நியமிக்​கப்​பட்​டார்​கள்.

அண்மை​யில் உடல்​நலக் குறை​வால் புகழேந்தி காலமான​தால் பொன்​முடி​யின் மகன் கவுதம சிகாமணி தெற்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் வடக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் நியமிக்​கப்​பட்​டனர். சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத்​தலைவர் பதவி மஸ்தானுக்கு வழங்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில், தேர்தலை குறி​வைத்து விழுப்புரம் மாவட்ட திமுக-வை மீண்​டும் கலைத்​துப் போட்​டிருக்​கும் திமுக தலைமை, புதிதாக விழுப்புரம் மத்திய மாவட்டம் என்று ஒன்றை உருவாக்கி அதற்கு அதிமுக வரவான லட்சுமணனை பொறுப்​பாள​ராக்கி இருக்​கிறது. கூடவே, முன்​னாள் அமைச்​சரான மஸ்தானை மீண்​டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும், கவுதம சிகாமணியை தெற்கு மாவட்ட பொறுப்​பாள​ராக​வும் அறிவித்​திருக்​கிறார்​கள்.

மஸ்தான் செஞ்சி, மயிலம், திண்​டிவனம் தொகு​தி​களுக்​கும், கவுதம சிகாமணி விக்​கிர​வாண்டி, திருக்​கோ​விலூர் தொகு​தி​களுக்​கும், விழுப்பு​ரம், வானூர் தொகு​தி​களுக்கு லட்சுமணனும் பொறுப்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். புகழேந்தி மறைவால் கட்சிக்​குள் வன்னியருக்கான முக்​கி​யத்துவம் இல்லாமல் இருந்​தது.

அதை சரி செய்யவே புதிதாக ஒரு மாவட்​டத்​தைப் பிரித்து அதற்கு வன்னியரான லட்சுமணனை பொறுப்​பாள​ராக்கி இருக்​கிறது திமுக. அதேசம​யம், அதிமுக தரப்​பில் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்​டத்​துக்​கும் ஒரே செயலா​ளராக இருக்​கிறார் முன்​னாள் அமைச்சர் சி.வி.சண்​முகம்.

லட்சுமணன்

கடந்த 2015-ல் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலா​ளராக இருந்த லட்சுமணன் விழுப்புரம் - சென்னை புறவழிச்​சாலை​யோரம் சொந்​தமாக சுமார் 5 சென்ட் நிலத்தை வாங்கி அங்கு 104 அடி உயர கொடி கம்பத்தை நட்டு அதில் ஜெயலலிதா பிறந்​த​நாளுக்காக அப்போதைய உயர் கல்வித்​துறை அமைச்சர் பழனியப்பனை அழைத்து வந்து கொடியேற்​ற​வைத்​தார். இதன் பிறகு 2020-ல் அதிமுக-​வில் அமைப்புச் செயலா​ள​ராக​வும் மாநிலங்​களவை எம்பி-​யாக​வும் இருந்த போதே தனது ஆதரவாளர்​களுடன் திமுக-​வில் இணைந்​தார் லட்சுமணன்.

லட்சுமணன் அதிமுக கொடிக்​கம்பத்தை நட்ட இடம் அவரது சொந்த இடம் என்ப​தால் அந்த இடத்​தையோ, கொடிக்​கம்பத்​தையோ அதிமுக சொந்தம் கொண்​டாட​வில்லை. சில மாதங்​களுக்கு முன்பு அவரைச் சந்தித்த போது, அந்த கொடிக்​கம்பத்​தில் எப்போது திமுக கொடியை ஏற்றப்​போகிறீர்கள் என்று கேட்​டதற்கு, “எப்​போது கொடி ஏற்று​வேன் என்று உங்களுக்குத் தெரி​யா​தா?” எனக் கேட்டு அர்த்​தப் புன்னகை பூத்​தார். அதற்கான அர்த்​தம் இப்​போது ​விளங்கி இருக்​கிறது. ​விரை​வில் அந்​தக் ​கொடிக்​கம்பத்​தில் ஸ்​டா​லினோ உதயநி​தியோ ​திமுக ​கொடியை ஏற்று​வார்​கள் என்​கிறார்​கள் லட்​சுமணனின்​ ஆதர​வாளர்​கள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x