Published : 14 Feb 2025 03:56 PM
Last Updated : 14 Feb 2025 03:56 PM

மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரத்தில் பிப்.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பாக பிப்.16-ம் தேதி, ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை வகிக்கிறார். திமுகவைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x