Published : 07 Feb 2025 05:51 AM
Last Updated : 07 Feb 2025 05:51 AM
சென்னை: வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ளதால், இப்பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 7 வழித்தடங்களின் 63 பேருந்துகள் தற்காலிகமாக பிப்.9-ம் தேதி முதல் ஐசிஎப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன.
அதன்படி, 20, 27டி, 23வி ஆகிய பேருந்துகள் ஐசிஎப் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று யு டர்ன் எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பேருந்து நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும். வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட சிற்றுந்து தடம் எண்கள் எஸ் 43, 44 ஆகியவை வழக்கம்போல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும்.
வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட தடம் எண் 22 பேருந்து வழித்தடம் நீட்டிக்கப்பட்டு, கொரட்டூர் வரையும், திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட தடம் எண் 63 கொண்ட பேருந்து நீட்டிக்கப்பட்டு ஐசிஎப் வரை இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கூறியள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment