Published : 07 Feb 2025 05:51 AM
Last Updated : 07 Feb 2025 05:51 AM

வில்​லிவாக்​கம் மெட்ரோ பணி: ஐசிஎப் நிலை​யத்​தில் இருந்து பஸ்களை இயக்க நடவடிக்கை

சென்னை: வில்​லிவாக்கம் பேருந்து நிலை​யத்​தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறவுள்ள​தால், இப்பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்​பட்ட 7 வழித்​தடங்​களின் 63 பேருந்​துகள் தற்காலிகமாக பிப்​.9-ம் தேதி முதல் ஐசிஎப் பேருந்து நிலை​யத்​தில் இருந்து இயக்​கப்பட உள்ளன.

அதன்​படி, 20, 27டி, 23வி ஆகிய பேருந்​துகள் ஐசிஎப் நிறுத்​தத்​தில் இருந்து புறப்​பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று யு டர்ன் எடுத்து வில்​லிவாக்கம் (கல்​பனா) பேருந்து நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்​தடத்​திலேயே இயக்​கப்​படும். வில்​லிவாக்​கத்​தில் இருந்து இயக்​கப்​பட்ட சிற்றுந்து தடம் எண்கள் எஸ் 43, 44 ஆகியவை வழக்​கம்​போல் வில்​லிவாக்கம் பேருந்து நிலை​யத்​திலிருந்தே இயக்​கப்​படும்.

வில்​லிவாக்கம் வரை இயக்​கப்​பட்ட தடம் எண் 22 பேருந்து வழித்​தடம் நீட்​டிக்​கப்​பட்டு, கொரட்​டூர் வரையும், திரு​வேற்​காடு முதல் வில்​லிவாக்கம் வரை இயக்​கப்​பட்ட தடம் எண் 63 கொண்ட பேருந்து நீட்​டிக்​கப்​பட்டு ஐசிஎப் வரை இயக்​கப்​படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் கூறியள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x