Last Updated : 06 Feb, 2025 06:39 PM

1  

Published : 06 Feb 2025 06:39 PM
Last Updated : 06 Feb 2025 06:39 PM

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11-ல் மதுபான கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் சாராயக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து கள், சாராயம், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கலால் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x