Published : 31 Jan 2025 06:27 AM
Last Updated : 31 Jan 2025 06:27 AM
சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறிய கட்சிகள் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சிகளுடனான கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். கூட்டத்தில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர், பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறிய கட்சிகள் பேச விரும்புவதாகவும், ஆனால், அவர்களுக்கு குறைவான நேரமே ஒதுக்கப்படுவதால், அவர்களது கோரிக்கைகளை முழுமையாக சொல்லமுடிவதில்லை என்றும், எனவே, சிறிய கட்சிகளுக்கு கூட்டத்தொடரில் கூடுதல் நேரம் வழங்க வேண்டும்,’ என்று வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...