Published : 28 Jan 2025 06:06 AM
Last Updated : 28 Jan 2025 06:06 AM
சென்னை: கடலில் பாலம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து பாதுகாக்கும் வகையில், ஒரு கமிட்டியை அமைக்க மீனவர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சென்னை நொச்சிக்குப்பம் முதல் நீலாங்கரை வரை கடலில் 15 கி.மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் இப்பகுதியில் வசிக்கும் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கும். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதேபோல், மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறும் திட்டம், கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்காரணமாக, திருவான்மியூர் கடற்கரை பகுதியில் பெரிய வலைகள் மற்றும் மீன்களை உலர வைப்பதற்கான இடம் சுருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கும் வகையில் ஒரு கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீனவர் சங்க பிரநிதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT