Published : 23 Jan 2025 12:24 AM
Last Updated : 23 Jan 2025 12:24 AM

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்: காரணம் என்ன?

மணீஷ், ஸ்ரீகாந்த்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில், சுயேச்சை வேட்​பாளர் பத்மாவ​தி​யின் வேட்​பு மனு தள்ளுபடி விவகாரம் தொடர்​பாக, தொகுதி தேர்தல் அலுவலர் மணீஷ் இடமாற்றம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்தல் வாக்​குப்​ப​திவு பிப். 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடத்​தும் அலுவலராக, ஈரோடு மாநக​ராட்சி ஆணையர் மணீஷ் நியமிக்​கப்​பட்டு, வேட்​புமனு தாக்​கல், பரிசீலனை உள்ளிட்ட பணிகளை மேற்​கொண்​டார்.

வேட்​புமனுக்கள் பரிசீலனை​யின்​போது, கர்நாடக மாநிலம் பெங்​களூரு கே.ஆர்​.புரம் சட்டப்​பேர​வைத் தொகு​தி​யைச் சேர்ந்த வி.பத்​மாவதி என்ற சுயேச்சை வேட்​பாளரின் மனு ஏற்கப்​பட்​டது. ஆனால், தேர்தல் ஆணைய விதி​முறை​களின்​படி, அந்த மாநிலத்​தைச் சேர்ந்​தவர் மட்டுமே சட்டப்​பேர​வைத் தொகு​தி​யில் போட்​டியிட முடி​யும் என்ப​தால், பத்மாவ​தி​யின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்​டும் என சுயேச்சை வேட்​பாளர்கள் போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்​தும் அலுவலரும், ஆட்சி​யருமான ராஜகோபால் சுன்கரா விசாரணை மேற்​கொண்​டார். மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்​டோருடன் ஆலோசனை மேற்​கொண்​டார். பத்மாவ​தி​யின் வேட்​புமனு தள்ளுபடி செய்​யப்​படு​வதாக அறிவிக்​கப்​பட்​டது. இதன்​மூலம், வேட்​பாளர்களின் எண்ணிக்கை 46 ஆக குறைந்​தது.

தேர்தல் விதி​முறை​களுக்கு மாறாக, சுயேச்சை வேட்​பாளர் பத்மாவ​தி​யின் வேட்​புமனு ஏற்கப்பட்ட குளறு​படிக்கு, தேர்தல் நடத்​தும் அலுவலர் மணீஷ் பொறுப்​பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்​டது. இந்நிலை​யில், தொகுதி தேர்தல் நடத்​தும் அலுவலரான மணீஷ் நேற்று முன்​தினம் இரவு மாற்​றப்​பட்​டார். அவருக்கு மாற்றுப் பணியிடம் ஒதுக்​கப்​பட​வில்லை. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநக​ராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்​தும் அலு​வலராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon