Published : 22 Jan 2025 05:22 PM
Last Updated : 22 Jan 2025 05:22 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பெரிய தாழையில் மீனவர்கள் விரித்த வலையில் 1 டன் எடை கொண்ட கொம்பு திருக்கை மீன் சிக்கியது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் ஜோசப் என்பவரது பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது, திடீரென ராட்சத கொம்பு திருக்கை மீன் ஒன்று வலையில் சிக்கியது. வலை யுடன் பைபர் படகில் கயிறு கட்டி அந்த மீனை கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அதனை டிராக்டர் மூலம் கடற்கரையில் இருந்து வெளியே கொண்டு வந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தில் ஏற்றி ஏலம் விடப்பட்டது. ஒரு டன் எடை கொண்ட அந்த கொம்பு திருக்கை மீன் ரூ.56 ஆயிரத்துக்கு ஏலம் போனது. அந்த மீனை கிராம மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...