Last Updated : 03 Jan, 2025 12:36 PM

1  

Published : 03 Jan 2025 12:36 PM
Last Updated : 03 Jan 2025 12:36 PM

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு தொடங்கியது

விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கியது.

விழுப்புரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது மாநில மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கினைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் எம்.ஏ..பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ,வாசுகி, டி.கே. ரங்கராஜன், எம்.பி.க்கள் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், எம் எல்ஏக்கள் நாகை மாலி, சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பேரணி தொடங்குகிறது.மாநில மாநாட்டையொட்டி விழுப்புரம் -சென்னை சாலையிலிருந்து மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கும் பேரணி தொடங்குகிறது. காட்பாடி மேம்பாலம், மருத்துவமனை வீதி, நான்குமுனை சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் நகராட்சித் திடல் பகுதியை அடைகிறது.

இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், பேபி, ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று பேசுகின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், மாவட்டங்களிலிருந்து கட்சியினர் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டு அமர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x