Published : 10 Dec 2024 03:47 PM
Last Updated : 10 Dec 2024 03:47 PM

சென்னை மெரினா வளைவு சாலையில் அங்காடி அமைத்தும் திறந்தவெளி கடைபோடும் வியாபாரிகள்... ஏன்?

மெரினா வளைவு சாலை​யில் திறந்​தவெளி​யில்​ ​விற்​பனை​யில்​ ஈடு​பட்​டுள்​ள ​ மீன் வி​யாபாரி​கள்​. | படம்​: ச.​கார்​த்​திகேயன்​ |

சென்னை மெரினா வளைவு சாலை​யில் உள்ள நொச்​சிக்​குப்​பத்​தில் மாநக​ராட்சி சார்​பில் ரூ.15 கோடி​யில் 366 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி அமைக்​கப்​பட்​டது. இதில் மீனவர்கள் மற்றும் பொது​மக்​களுக்கான குடிநீர், கழிப்பறை வசதி​கள், மீன்​களைச்சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதி​கள், இவ்வளாகத்​திலிருந்து வெளி​யேற்​றப்​படும் கழிவுநீரை சுத்​திகரிக்​கும் நிலையம் மற்றும் 60 இருசக்கர வாகனங்​கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்​தும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்​தப்​பட்​டுள்ளன.

இந்த நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டா​லின் திறந்​து​வைத்​தார். அக்டோபரில் வியாபாரி​களுக்கு கடைகள் ஒதுக்​கப்​பட்டன. இந்நிலை​யில், தற்போது, முன்பு இருந்​ததைப் போலவே, திறந்​தவெளி​யில் மீன் கடைகள் செயல்​பட்டு வருகின்றன.

ஒரு கடையும், வியாபாரி​களுக்கு ஒதுக்​கப்​பட்ட இடத்​தில் நடத்​தப்​பட​வில்லை. காலம் காலமாக சாலை​யோரம் கடை வைத்​தவர்​கள், தங்கள் பழக்​கத்தை மாற்றிக்​கொள்ள முடிய​வில்​லையா? இதை மாநக​ராட்சி முறைப்​படுத்​தக்​கூடாதா? ரூ.15 கோடி செலவிட்டு மீன் அங்காடி அமைத்​ததற்கான நோக்கமே பாழாகி​யுள்ளது என மீன் வாங்க வரும் பொது​மக்கள் குற்​றஞ்​சாட்டி வருகின்​றனர்.

இதுகுறித்து திறந்த வெளி​யில் கடை வைத்​திருக்​கும் மீன் வியாபாரி​களிடம் கேட்​ட​போது, அவர்கள் கூறிய​தாவது: இங்குள்ள கடைகளில் போதுமான தண்ணீர் வசதி, தூய்மை என அனைத்து வசதி​களும் உள்ளன. முன்பு சாலை​யோரம் நாங்கள் வெயி​லில், துர்​நாற்​றத்​தில் இருந்த நிலையை நினைத்து பார்க்​கும்​போது, நாங்கள் சொர்க்​கத்​தில் அமர்ந்து வியாபாரம் செய்வது போன்று மகிழ்ச்​சியை தருகிறது. ஆனால் இந்த அங்காடி​யில் முதல் வரிசை​யில் உள்ள கடைகளுக்கு தான் பொது​மக்கள் வருகின்​றனர். பின் பகுதி​யில் உள்ள கடைகளுக்கு பொது​மக்கள் வருவ​தில்லை. அதனால் அவர்கள் வியாபார​மும், வருமான​மும் இல்லாமல் அவதிப்​படு​கின்​றனர்.

ஆலோசகர்களை நியமித்து, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயரதி​காரிகள் கூடி சிந்​தித்து திட்​டத்தை செயல்​படுத்து​வதாக கூறுகின்​றனர். ஆனால் இது போன்ற நடைமுறை சிக்​கல்கள் குறித்து மாநக​ராட்சி அதிகாரிகள் யோசிக்​க​வும் இல்லை. தீர்​வு​ காணவும் முயற்சிக்க​வில்லை. எங்களை மீன் அங்காடிக்​குள் அடைத்​ததோடு அவர்​களின் கடமை முடிந்​து​விட்​டது. மீன் வாங்க யாரும் வராத​தால், பின்​பகுதி கடை வியாபாரிகள் முதலில் வெளி​யில் வந்து கடை அமைத்​தனர். இப்போது அனைவரும் வெளி​யில்​தான் கடை அமைத்​துள்ளனர்.

எங்களுக்கு நிரந்​தரமாக கடை ஒதுக்​கியதற்கு பதில், சுழற்சி முறை​யில் ஒரு வாரம் முன்​வரிசை, ஒரு வாரம் பின்​வரிசை என கடைகளை ஒதுக்கி இருக்​கலாம். அப்போது தான் அனைவருக்​கும் சமமான வியாபாரம் நடைபெறும். வெளி​யில் கடை போடுவது தடுக்​கப்​படும். சிலர் கடைகளை சில லட்ச ரூபாய்களை வாங்​கிக்​கொண்டு, பிற வியாபாரி​களுக்கு வாடகைக்கு விடு​கின்​றனர். இதை தடுக்க வேண்​டும். இவ்வாறு வியாபாரிகள் தெரி​வித்​தனர். மாநக​ராட்சி அதிகாரி​களிடம் கேட்​ட​போது, “வெளி​யில் கடை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுககப்​படும்” என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x