Published : 24 Aug 2014 01:20 PM
Last Updated : 24 Aug 2014 01:20 PM

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி ரூ.1.42 லட்சம் கொள்ளை: முகமூடித் திருடர்கள் அட்டகாசம்

தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க்குக்கு வந்த முகமூடித் திருடர்கள் அங்கிருந்த ஊழியர் களை அடித்துப் போட்டுவிட்டு ரூ.1.42 லட்சத்தைக் கொள்ளை யடித்துச் சென்றனர்.

தாம்பரம் - மதுரவாயல் புற வழிச்சாலையில் கடப்பேரி அருகே புலிகொரடு என்ற இடத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் வெள்ளிக் கிழமை இரவு கேஷியர் பாலசுப்பிர மணியமும் 5 ஊழியர்களும் இரவுப் பணியில் இருந்தனர். சனிக் கிழமை அதிகாலை 3 மணி அளவில் 3 இருசக்கர வாகனங்க ளில் 9 பேர் பெட்ரோல் பங்க்குக்கு முகமூடி அணிந்து வந்தனர். 3 வாகனங்க ளிலும் முழுமையாக பெட்ரோல் போடுமாறு கூறினர். பெட்ரோல் நிரப்பிய பிறகு, அவர்களிடம் ஊழியர் பணம் கேட்டார். இதை யடுத்து, அவரை மர்ம நபர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதைப் பார்த்து கேஷியர் பாலசுப்பிரமணியம் ஓடிவந்தார். அவரையும் கும்பல் தாக்கியது.

அவர்களிடம் அரிவாள், கத்தி இருந்ததால், மற்ற ஊழியர்கள் பீதியடைந்து தப்பி ஓடினர். 2 பேரையும் சரமாரியாக அடித்துப் போட்ட கும்பல், அங்கு இருந்த ரூ.1.42 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்த தாம்பரம் போலீஸார் காயமடைந்த பால சுப்பிரமணியத்தை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். தப்பிய முகமூடிக் கொள்ளை கும்பலை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x