Published : 28 Oct 2024 04:56 AM
Last Updated : 28 Oct 2024 04:56 AM

தமிழகத்தில் சில இடங்களில் நவ.2 வரை மழை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக். 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, தக்கலை ஆகிய இடங்களில் 7 செ.மீ., நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை ஆகிய இடங்களில் 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், பேச்சிப்பாறை, மற்றும் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 31-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில்லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x