Published : 26 Oct 2024 10:37 AM
Last Updated : 26 Oct 2024 10:37 AM

அவிநாசி அருகே விபத்து: கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கார் விபத்து

அவிநாசி: அவிநாசி அருகே நேற்று நள்ளிரவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் அபர்ணா (26). சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்மில் 2-ம் ஆண்டு எம்.பிஏ. படித்து வருகிறார். அவரது மற்றொரு மகள் ஹேமா (21). கோவை தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த அபர்ணாவின் நண்பர் மோனிஷ் பாபு (28). இவரது காரில் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே சிமெண்ட் கிடங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, 3 பேரும் பயணித்த கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

லாரி ஓட்டுநரான கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கல்லூரியில் பயிலும் சகோதரிகள் 2 பேர் உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மூவரின் சடலங்களும் அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x