Published : 17 Oct 2024 11:32 AM
Last Updated : 17 Oct 2024 11:32 AM
சென்னை: சென்னை - கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் பூர்விகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பூர்விகா நிறுவனத்தின் கடைகள் இயங்கி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT