Published : 09 Oct 2024 09:50 AM
Last Updated : 09 Oct 2024 09:50 AM

‘காஷ்மீர் மக்களின் விழைவை நிறைவேற்ற அளிக்கப்பட்ட தீர்ப்பு’ - தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் அங்கமான தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், “இது இந்தியா மற்றும் மக்களாட்சிக்கான வெற்றி மட்டுமல்ல, ஒன்றிய பாஜக அரசு ஜம்மு காஷ்மீரிடம் இருந்து அநியாயமாகப் பறித்த மாநிலத் தகுதியும் மாண்பும் மீட்டளிக்கப்பட வேண்டும் என்ற அம்மக்களின் விழைவை நிறைவேற்ற அளிக்கப்பட்ட தீர்ப்பும் ஆகும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள்!

இது ‘இண்டியா’ மற்றும் மக்களாட்சிக்கான வெற்றி மட்டுமல்ல, ஒன்றிய பாஜக அரசு ஜம்மு காஷ்மீரிடம் இருந்து அநியாயமாகப் பறித்த மாநிலத் தகுதியும் மாண்பும் மீட்டளிக்கப்பட வேண்டும் என்ற அம்மக்களின் விழைவை நிறைவேற்ற அளிக்கப்பட்ட தீர்ப்பும் ஆகும்.

நீதி, ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கிற - அனைவரையும் அரவணைக்கிற எதிர்காலம் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கான தொடக்கத்தை இத்தருணம் குறிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x