Published : 08 Oct 2024 02:52 PM
Last Updated : 08 Oct 2024 02:52 PM

சொத்து வரி உயர்வை கண்டித்து உதகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

உதகை: சொத்து வரி உயர்வை கண்டித்து உதகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என 15 இடங்களில் இன்று (அக்.8)காலை அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி அதிமுக சார்பில் உதகையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்பி கே.ஆர்.அர்ஜூணன், மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மாலினி பிரபாகரன், நகர செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x