Published : 04 Oct 2024 01:10 PM
Last Updated : 04 Oct 2024 01:10 PM

திருப்பூர்: நபிகள் நாயகம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபர் கைது

கைதானவர்

திருப்பூர்: நபிகள் நாயகம் குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளை பதிவிட்ட நபர் மீது திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து காதர் பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் முகநூலில் தவறாக பதிவு செய்துள்ளார். அவரது பதிவு இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. எனவே, நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.

இது தொடர்பான புகார் மனு முதல்வரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தப் புகார் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முகநூலில் அவதூறு பரப்பியதாக சுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x