Last Updated : 26 Sep, 2024 08:15 PM

 

Published : 26 Sep 2024 08:15 PM
Last Updated : 26 Sep 2024 08:15 PM

பஹ்ரைனில் கைதான 28 மீனவர்களை மீட்க சட்ட உதவி: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலி்ன் கடிதம்

சென்னை: பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான சட்டம் மற்றும் தூதரக உதவிகளை வழங்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டுக்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அங்கு எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்.11ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக, மீனவர்களது வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்கத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x