Published : 22 Sep 2024 08:51 AM
Last Updated : 22 Sep 2024 08:51 AM

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரயில் சேவை இன்று ரத்து

சென்னை: தாம்பரம் யார்டில் இன்று (செப்.22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பொறியியல் பணி நடைபெற உள்ளதால், இந்த நேரத்தில் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பயணிகளின் வசதிக்காக, சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு காலை 6.15, 6.55, 7.20, 7.45, 8.00, 8.35, 9.38, 10.10, 10.40, 11.20, நண்பகல் 12.00, மதியம் 1.05, 1.30, பிற்பகல் 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50, 6.20, 6.50, இரவு 7.00 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

அதேபோல, பல்லாவரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 7.10, 7.45, 8.10, 8.35, 8.55, 9.35, 10.35, 11.05, நண்பகல் 12.10, 12.55, மதியம் 1.55, பிற்பகல் 2.25, 3.20, மாலை 4.00, 4.40, 5,05, 5.20, 5,40, 6.05, 6.40, இரவு 7.15, 7.40, 7.50 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x