Published : 15 Sep 2024 08:40 AM
Last Updated : 15 Sep 2024 08:40 AM

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணியால் இன்று 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று அவ்வழித்தடத்தில் கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (செப்.15) காலை 9 முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, இன்று அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்துக்கு 10 பேருந்துகள், தியாகராய நகர் பேருந்து நிலையத்துக்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்துக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x