Published : 12 Sep 2024 07:13 AM
Last Updated : 12 Sep 2024 07:13 AM

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைத்த விவகாரம்: ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஜாபர் சாதிக் | கோப்புப் படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி ஜாபர் சாதிக் தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல்வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸாரால் கடந்தமார்ச் 9-ல் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்து சிறை மாற்று உத்தரவுப்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் தன்னை சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்பதால், அதுதொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஜாமீன் வழங்கிய பிறகும் வெளியே விடாமல் வைத்திருந்தது சட்டவிரோதம். இதுதொடர்பாக திஹார் சிறைத்துறை நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மனுதாரர்நிவாரணம் தேடலாம். ஆனால் மனுதாரரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிக்கு அதிகாரமில்லை எனக் கூற முடியாது என்று கூறி ஜாபர் சாதிக்கின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x