Published : 04 Sep 2024 04:45 AM
Last Updated : 04 Sep 2024 04:45 AM

விசாரணை முடிந்து தேவநாதன் யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனமோசடி தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூவரையும் 7 நாள் போலீஸார்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருந்த நிலையில், 7 நாள் விசாரணைக் குப்பிறகு மூவரும் நேற்று சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்புநீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து மூவரையும் செப்.17 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x