Last Updated : 03 Sep, 2024 08:18 PM

1  

Published : 03 Sep 2024 08:18 PM
Last Updated : 03 Sep 2024 08:18 PM

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப்.11-ல் 4 வட்டங்களில் பள்ளி விடுமுறை; கீழடி வைப்பகம் மூடல்

கீழடி | கோப்புப்படம்

சிவகங்கை: இமானுவேல்சேகரன் நினைவுநாளான செப்.11-ம் தேதி கீழடி அகழ் வைப்பகம் மூடப்படுகிறது. மேலும், சிவகங்கை மாவட்டத்தில் 4 வட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் கூறியது: “ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் செப்.11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழ் வைப்பகம் இயங்காது. அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 4 வட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, பரமக்குடியில் செப்.11-ல் நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருவோர் வாடகை வானகங்களில் வந்து செல்ல அனுமதியில்லை என ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x