Last Updated : 31 Aug, 2024 07:43 PM

1  

Published : 31 Aug 2024 07:43 PM
Last Updated : 31 Aug 2024 07:43 PM

செப்.9 முதல் ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு

கோப்புப் படம்

ராமநாதபுரம்: இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு செப்டம்பர் 9 முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடையுத்தரவு (புதிய குற்றவியல் சட்டப்படி 163 பிஎன்எஸ்எஸ்) பிறப்பிக்கப்படுகிறது.

இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் அனுமதியில்லை. போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்த முறையான அனுமதி பெற வேண்டும். மேலும் மாவட்டத்தில் செப்.9 முதல் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25 முதல் 31-ம் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகையான வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு (இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜை விழா உள்ளிட்டவைகளுக்கு) அஞ்சலி , மரியாதை செலுத்த ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வர அனுமதியில்லை.

மேலும், தலைவர்களின் நினைவிடத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் ஜோதி ஓட்டங்கள் எடுத்துவரவும் அனுமதியில்லை. முறையான அனுமதி பெற்று ஜோதி ஓட்டங்கள் நடத்த வேணடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x