Published : 21 Aug 2024 05:55 AM
Last Updated : 21 Aug 2024 05:55 AM

சென்னை | 8 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் ஆக.22, 24 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை9.10 மற்றும்11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்ட்ரல் - திருத்தணிக்கு ஆக.22,24 ஆகிய தேதிகளில் காலை 10மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் - சென்ட்ரலுக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை11.15, நண்பகல் 12 ஆகிய நேரங்களில்புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், அரக்கோணம் - திருவள்ளூர்இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி - சென்னை சென்ட்ரலுக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் - அரக்கோணத்துக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு ஆக.22, 24 ஆகிய தேதிகளில் காலை 9.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x