Last Updated : 15 Aug, 2024 04:35 PM

 

Published : 15 Aug 2024 04:35 PM
Last Updated : 15 Aug 2024 04:35 PM

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இரு மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

திருநெல்வேலி: காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்த சிவகாசியை சேர்ந்த முருகன் மகள்கள் கல்லூரி மாணவி மேனகா (18), 11 -ம் வகுப்பு மாணவி சோலை ஈஸ்வரி (15) மற்றும் அவர்களது உறவினர் சங்கரேஸ்வரன் (40) ஆகிய மூவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். மாரிஸ்வரன் என்ற இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். கல்லிடைக்குறிச்சி போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x