Last Updated : 13 Aug, 2024 05:27 PM

 

Published : 13 Aug 2024 05:27 PM
Last Updated : 13 Aug 2024 05:27 PM

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவில் கதம்ப வண்டு கடித்து 40 பேர் காயம்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கதம்ப வண்டு கடித்து காயமடைந்து அனுமதிக்கப்பட்ட சுந்தர நடப்பு கிராம மக்கள்.

சிவகங்கை: சிவகங்கை அருகே கோயில் திருவிழாவில் கதம்ப வண்டு கடித்ததில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிவகங்கை அருகே சுந்தர நடப்பு கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடித் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அக்னிச்சட்டி எடுத்துச் சென்றனர். கோயிலை நோக்கி கண்மாய் கரையில் சென்றபோது கோயில் அருகே ஆலமரத்தில் இருந்த கதம்ப வண்டுகள் அவர்களை விரட்டி விரட்டிக் கடித்தன.

இதில் சாய், லெட்சுமி, கணேசன், லித்திகாஸ்ரீ, நந்தினி, முகிநாத், சுஜூ, ஸ்ரீதர்ஷினி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x