Last Updated : 12 Aug, 2024 03:35 PM

 

Published : 12 Aug 2024 03:35 PM
Last Updated : 12 Aug 2024 03:35 PM

புதுச்சேரி புதிய டிஜிபி ஷாலினி சிங் பதவியேற்பு: ஆளுநர், முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி புதிய டிஜிபி-யாக ஷாலினி சிங் இன்று (ஆக.12) பதவியேற்றார். இதையடுத்து ஆளுநர், முதல்வர் ஆகியோரை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி-யாக இருந்த ஸ்ரீனிவாஸ் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி மாநில டிஜிபி-யாக நியமிக்கபட்டார். இதையடுத்து நேற்று இரவு புதுச்சேரி வந்த அவர்,‌ இன்று போலீஸ் தலைமையகத்தில் டிஜிபி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக போலீஸ் தலைமையக அலுவலக வளாகத்தில் ஷாலினி சிங்கிற்கு, அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

டிஜிபி-யாக பொறுப்பேற்ற ஷாலினி சிங்க், ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனையும் சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x