Published : 12 Aug 2024 07:46 AM
Last Updated : 12 Aug 2024 07:46 AM

ஆக.13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும்: மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, வரும் 13-ம் தேதி(நாளை) முதல் 15-ம் தேதி(வியாழக்கிழமை) வரை இதனைமேற்கொள்ள பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இயக்கத்துக்கு ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்’ (ஹர் கர்திரங்கா) என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம்:

2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் நடப்பாண்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது.

செல்ஃபி எடுக்கலாம்: இந்த பிரச்சாரம் குறித்த தகவல்களை உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பரப்பி, 13-ம் தேதி முதல்15-ம் தேதி வரை சுதந்திர தினத்தைஆர்வமுடன் கொண்டாட ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கொண்டாட்டங்களை செல்ஃபிகளாக படம் எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வுகளை www.harshartiranga.com என்ற இணையதளத்தில் செல்ஃபி படத்துடன் பகிரலாம். மேலும் எக்ஸ், யூ-டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x