Published : 10 Aug 2024 04:57 AM
Last Updated : 10 Aug 2024 04:57 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 42,957 பேர் விண்ணப்பம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 42,957 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஜூலை 31-ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 5 மணியுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடங்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 42,957 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

தகுதியான மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியலை வரும் 19-ம் தேதி வெளியிட்டு,21-ம் தேதி கலந்தாய்வை தொடங்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 36,100 பேரும்,2023-ம் ஆண்டில் 40,199 பேரும் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x