Published : 02 Aug 2024 07:01 PM
Last Updated : 02 Aug 2024 07:01 PM

அரசு விரைவுப் பேருந்துகளை ‘ஒப்பந்த ஊர்தி’ அடிப்படையில் வாடகைக்கு பயன்படுத்தும் திட்டம்

சென்னை: விரைவுப் பேருந்துகளை வாடகைக்கு பயன்படுத்தலாம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசுப் பேருந்துகள், குளிர்சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தொலைதூரத்தில் உள்ள ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளை, குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திபெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ளவும் ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பேருந்துகள் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கும், இதர இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு www.tnstc.in என்ற இணையதள முகவரி மற்றும் 94450 14402, 94450 14424, 94450 14463 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x